பாடத்திட்டங்களில் மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு மீண்டும் இணைக்கப்பட வேண்டும், இரா.சாணக்கியன்
இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது, சமூகக்கல்வி பாட புத்தகத்திலிருந்து மறைக்கப்பட்ட தமிழர்களின் வரலாறுகள் மீண்டும் இணைக்கப்படவேண்டும் என்பதே தமது கோரிக்கை என, தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்திலே ஏதோவொரு நம்பிக்கையின் அடிப்படையில் மறைந்த எமது தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தன் அடுத்த பொங்கலுக்கிடையில் தீர்வு கிடைக்கும், அடுத்த தீபாவளிக்கிடையில் தீர்வு கிடைக்கும் என்றெல்லாம் சொல்லக்கூடிய விதத்திலே தமிழர்களின் அரசியல் நிலவரம் இருந்தது. மேலும் பலர் இது தொர்பில் பல விமர்சனங்களை முன்வைத்தனர்.மட்டுமன்றி நகைச்சுவையாகவும் இது பற்றி சிலர் பேசினர்.