நாத்தாண்டிய பகுதியில் அதிர்ச்சி சம்பவம்

அதிக இரத்தப்போக்கு மற்றும் கடும் உடல் வலியால் நாத்தாண்டிய பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வைத்திய பரிசோதனையின் போது, அவரது கருப்பைப் பகுதியில் இரண்டு கண்ணாடி போத்தல்கள் இருந்தது கண்டறியப்பட்டு, அவை அவசர சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளன.

விசாரணைகளின் அடிப்படையில், குறித்த பெண் தான் பணிபுரியும் நிறுவனத்தின் உரிமையாளர் வீட்டில் நடைபெற்ற ஒரு விருந்தில் கலந்து கொண்டதாகவும், அங்கு மது அருந்திய நிலையில் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. அந்த சூழ்நிலையில், அவர் இரண்டு ஆண்களால் கடுமையான பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்த கொடூரச் சம்பவத்தின் போது, அவரது உடலில் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் விசாரணைகள் சுட்டிக்காட்டுகின்றன. இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட அதிக இரத்தப்போக்கு காரணமாக, அவர் மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்கள் மேற்கொண்ட அவசர சத்திரசிகிச்சையின் மூலம் அவரது உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவரும், இரண்டு ஆண்களும் கைது செய்யப்பட்டு, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தேவையான மருத்துவ மற்றும் உளவியல் உதவிகள் வழங்கப்பட்டுவரும் நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


📌 WhatsApp Group:

https://chat.whatsapp.com/Bp0wCvP1XcTIfskZpgTYHP

📢 WhatsApp Channel:

https://whatsapp.com/channel/0029VbBjDMYEKyZOQD96u83K

👍 Facebook Page:

https://www.facebook.com/share/1CGgrzvf4y/

🌐 Website: https://eastmirror.lk

👉 இன்றே Join செய்யுங்கள் – செய்திகளில் முன்னிலையில் இருங்கள்!

Share this article:

Related News

AD
Advertise Here!

விளம்பரத்திற்கு இப்பொழுதே

Chat Now
Popular News
Get In Touch

Batticaloa

info@eastmirror.lk

+94 75 0550 660

Follow Us

About us
Privacy Policy
Terms and condition
Website Designed and Developed by Kingsparrow Group of Companies(PVT)LTD +94750550660