ஒத்திவைக்கப்பட்ட உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்
இயற்கை அனர்த்தங்கள் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் மீதமுள்ள பாடங்களுக்கான பரீட்சைகள் இன்று (12) முதல் ஆரம்பமாகின்றன. இப் பரீட்சைகள் ஜனவரி 20 வரை நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
அதேவேளை, 2026 ஆம் ஆண்டுக்கான தேசிய பரீட்சை அட்டவணையும்
வெளியிடப்பட்டுள்ளது.இதன் மூலம் பரீட்சை நாட்காட்டியை வழக்கமான கால அட்டவணைக்கு மீட்டெடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஏனைய பரீட்சைகள் நடைபெறும் திகதிகள்:
O/L 2025:பெப்ரவரி 17-26
5ஆம் தர புலமைப்பரிசில்: ஆகஸ்ட் 09
A/L 2026: ஆகஸ்ட் 10-செப்டம்பர் 05
GIT: ஒக்டோபர் 24
O/L 2026: டிசம்பர் 08-17
📌 WhatsApp Group:
https://chat.whatsapp.com/Bp0wCvP1XcTIfskZpgTYHP
📢 WhatsApp Channel:
https://whatsapp.com/channel/0029VbBjDMYEKyZOQD96u83k
👍 Facebook Page:
https://www.facebook.com/share/1CGgrzvf4y/
🌐 Website: https://eastmirror.lk
👉 இன்றே Join செய்யுங்கள் – செய்திகளில் முன்னிலையில் இருங்கள்!